ஒருவர் தன்னை சாரதிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு, ஒருசில நிபந்தனைகள் தேவைப்படும்:
- நீங்கள் ஆகக் குறைந்தது 18 வயதாக இருத்தல் வேண்டும்.
- நீங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆபத்தில் உதவும் பாடத்திற்குச் (உயிர்காக்கும் உடனடி நடவடிக்கைகளுக்கான பாடம்)செல்ல வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கண் பரிசோதகரால் கண் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி பெறவேண்டும்.
- நீங்கள் போக்குவரத்துப் பற்றிய பாடத்தை ஒரு அனுமதிக்கப்பட்ட சாரதிப் பயிற்சியாளரிடம் கற்றிருக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு எழுத்து மூலமான பாடப் பரீட்சையில் சித்திபெற வேண்டும், இதில் நீங்கள் போக்குவரத்து விதிகள் குறித்து விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான அளவில் சாரதிப் பாடசாலையில் செய்முறையை மணித்தியாலங்களைப் பெற்றிருக்க வேண்டும். சுவிசில் சாரதிப் பாடசாலைக் கட்டணங்கள் மிகவும் உயர்ந்தவை, ஒரு மணித்தியாலத்திற்கு ஏறத்தாழ 100 பிராங்குகள் செலவாகும்.
- சாரதிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது அதிகமாக சாரதிப் பாடசாலை அல்லது ஆண் அல்லது பெண் சாரதி பயிற்சியாளர்களால் மேற்கொள்ளப்படும்.
- பரீட்சையில் சித்தியடைந்த பின்பு உங்களுக்கு பரீட்சார்த்த ரீதியாக ஒரு சாரதிப்பத்திரம் வழங்கப்படும். இந்தப் பரீட்சார்த காலம் 3 வருடங்களாக இருக்கும். இந்தப் பரீட்சார்த்த காலத்தில் கட்டாயமாக நீங்கள் மேலதிகமாக அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் வழங்குபவரிடம் இரு நாட்கள் கற்கும் பாடங்களுக்குச் செல்ல வேண்டும். பரீட்சார்த்த காலம் முடிவடைந்து மற்றும் கட்டாயமாக செல்ல வேண்டிய இரு நாள் பாடத்திட்டத்திற்குச் சென்றிருந்தால் காலவரையறையற்ற சாரதிப்பத்திரம் வழங்கப்படும். 1 மார்கழி 2005க்கு முன்பாக சாரதிப்பத்திரம் தரம் A (மோட்டார் வாகனம்) தரம்; B (நபர்கள் போக்குவரத்து வாகனம்) பெற்றிருக்கும் நபர்களுக்கு, வேறு விதிகள் செல்லுபடியாகும்.
நீங்கள் இதுகுறித்து வீதிப்போக்குவரத்துத் திணைக்களத்தில் அறிந்து கொள்ளலாம் அல்லது ஒரு சாரதிப் பாடாசலையில் அல்லது ஆண் அல்லது பெண் சாரதி பயிற்சியாளர்களிடம் ஆலோசனை பெறலாம்.